மண்ணாங்கட்டிங்கிற தலைப்புக்கும் உள்ள எழுதுர விசயத்துக்கும் என்ன சம்பந்தம்னு தயவுசெய்து யாரும் கேட்ராதீங்க. சத்தியமா எனக்கும் தெரியாது (ஹி...ஹி..)
சரி விட்ட எடத்தப் பாப்போம்.
தமிழுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்னு ரொம்ப யோசிச்சி பாவம் திண்டாடியிருப்பீங்க (டேய்.. டேய்.. உன் பிளாக்க இன்னும் ஒருத்தரும் படிக்கலடா...)
நான் படிச்ச வகுப்புல கிட்டத்தட்ட 50 பேர் இருந்தோம். தமிழ் டீச்சர் தான் எங்களோட கிளாஸ் டீச்சரும். நான் சேர்ந்த நாளாவது நாள் வகுப்புக்கு மாணவர் தலைவன் (கிளாஸ் லீடர்) வேணும் அதனால அதுக்கு ஒரு போட்டி வச்சி தேர்வு செய்யப் போரதாக டீச்சர் அறிவிச்சாங்க. போட்டின்னா அது கட்டாயப் போட்டியில்ல யார்யாருக்கெல்லாம் லீடர் ஆகனும்னு ஆசை இருக்கோ அவங்க மட்டும் கலந்துக்கலாம்னு சொல்லீட்டு உடனே யார்யாரெல்லாம் போட்டி போடப்போரீங்க கையத்தூக்குன்னாங்க.
டப டபன்னு ஒரு 20வது 25 பேர் தூக்குனாங்க. நான்லாம் என்னைக்கும் தலைவன் பதவிக்கு தேடிப்போரவனில்லைங்கரதால பேசாம இருந்தேன் (ஆமாடா.. அது அமெரிக்க சனாதிபதி பதவி நீ தேடிப்போகமாட்ட.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..).
தீடீர்னு ஒரு குரல் ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்னு யாரையோ கூப்ட்ட மாதிரி கேட்டுச்சி யாருடான்னு திரும்பிப் பாத்தா அதே பொண்ணு. நீயும் கையத்தூக்குன்னுச்சி. அது தான் அவ என் கிட்ட பேசுன மொத வார்த்தை. அவ்ளோ தான் என்ன ஏதுன்னு கேக்காம மகுடிக்கு மயங்குற பாம்பு மாதிரி உடனே கையத்தூக்கீட்டேன் (ஹி..ஹி.. அவ்ளோ குழந்த மனுசு..). உடனே அதுக்கும் சிநேகமா ஒரு புன்னகையைப் பூத்தாள். அப்ப கூட பாவிப்பய நான் பதிலுக்கு சின்னதா கூட சிரிக்கல. கையத்தூக்குன எல்லார் பேரையும் டீச்சர் எழுதுகிட்டாங்க.
போட்டி என்னன்னா டீச்சர் ஐம்பது தமிழ் வார்த்தைகளை ஒன்னொன்னா வரிசையா சொல்லுவாங்க யாரு அதிகமா எழுத்துப்பிழை இல்லாமா எழுதுறாங்களோ அவங்கதான் வகுப்புத்தலைவன்.
இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு எல்லாரும் நல்லா படிச்சிட்டு வாங்கன்னு சொல்லீட்டாங்க. எனக்கு வேர்த்திடுச்சி ஏன்னா நமக்குதான் எக்ஸாம்னாலே ஆகாதே. நான் கூட போட்டீன்னா ஒட்டப்போட்டி, கபடிப்போட்டீன்னு தாப்பா பீல் பண்ணீட்டேன். கூட படிக்கிற எங்க ஊர் பசங்க வேர டேய் ஊர் மானமே இதுல தான் இருக்குன்னு கெளப்பீட்டானுங்க (பாத்துக்கோங்க... அந்த வயசுலயே ஊர் மானத்தக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு நம்ம கைல தான் இருந்துச்சி.. ஹி..ஹி..)
என்ன பண்றதுன்னு தெரியாமா பேன்னு முழிச்சிட்டு இருக்கும்போது அவ வந்தா. நீ எப்படியாவது ஜெயிச்சிருவேன்னு தெரியும் அதான் உன்ன கையத்தூக்கச்சொன்னேன்னு மழலைக்குரல்ல சொல்லீட்டு விரு விருன்னு போய்ட்டா..சும்மாவா சொன்னாங்க ஒவ்வொரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருக்கான்னு (ஹி..ஹி..)
அப்போ நான் ஜெயிச்சிட்டேனா ? அப்டீன்னு சஸ்பன்ஸ்லாம் வைக்க மாட்டேன். நான் ஜெயித்தேன். ஆனா எப்படிங்குறதுதான் சஸ்பென்ஸே.. ஹி..ஹி..
அந்த ஜெயித்த கதையை அடுத்த பகுதியில பாக்கலாம்.
வர்ட்டா..
சரி விட்ட எடத்தப் பாப்போம்.
தமிழுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்னு ரொம்ப யோசிச்சி பாவம் திண்டாடியிருப்பீங்க (டேய்.. டேய்.. உன் பிளாக்க இன்னும் ஒருத்தரும் படிக்கலடா...)
நான் படிச்ச வகுப்புல கிட்டத்தட்ட 50 பேர் இருந்தோம். தமிழ் டீச்சர் தான் எங்களோட கிளாஸ் டீச்சரும். நான் சேர்ந்த நாளாவது நாள் வகுப்புக்கு மாணவர் தலைவன் (கிளாஸ் லீடர்) வேணும் அதனால அதுக்கு ஒரு போட்டி வச்சி தேர்வு செய்யப் போரதாக டீச்சர் அறிவிச்சாங்க. போட்டின்னா அது கட்டாயப் போட்டியில்ல யார்யாருக்கெல்லாம் லீடர் ஆகனும்னு ஆசை இருக்கோ அவங்க மட்டும் கலந்துக்கலாம்னு சொல்லீட்டு உடனே யார்யாரெல்லாம் போட்டி போடப்போரீங்க கையத்தூக்குன்னாங்க.
டப டபன்னு ஒரு 20வது 25 பேர் தூக்குனாங்க. நான்லாம் என்னைக்கும் தலைவன் பதவிக்கு தேடிப்போரவனில்லைங்கரதால பேசாம இருந்தேன் (ஆமாடா.. அது அமெரிக்க சனாதிபதி பதவி நீ தேடிப்போகமாட்ட.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..).
தீடீர்னு ஒரு குரல் ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்னு யாரையோ கூப்ட்ட மாதிரி கேட்டுச்சி யாருடான்னு திரும்பிப் பாத்தா அதே பொண்ணு. நீயும் கையத்தூக்குன்னுச்சி. அது தான் அவ என் கிட்ட பேசுன மொத வார்த்தை. அவ்ளோ தான் என்ன ஏதுன்னு கேக்காம மகுடிக்கு மயங்குற பாம்பு மாதிரி உடனே கையத்தூக்கீட்டேன் (ஹி..ஹி.. அவ்ளோ குழந்த மனுசு..). உடனே அதுக்கும் சிநேகமா ஒரு புன்னகையைப் பூத்தாள். அப்ப கூட பாவிப்பய நான் பதிலுக்கு சின்னதா கூட சிரிக்கல. கையத்தூக்குன எல்லார் பேரையும் டீச்சர் எழுதுகிட்டாங்க.
போட்டி என்னன்னா டீச்சர் ஐம்பது தமிழ் வார்த்தைகளை ஒன்னொன்னா வரிசையா சொல்லுவாங்க யாரு அதிகமா எழுத்துப்பிழை இல்லாமா எழுதுறாங்களோ அவங்கதான் வகுப்புத்தலைவன்.
இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு எல்லாரும் நல்லா படிச்சிட்டு வாங்கன்னு சொல்லீட்டாங்க. எனக்கு வேர்த்திடுச்சி ஏன்னா நமக்குதான் எக்ஸாம்னாலே ஆகாதே. நான் கூட போட்டீன்னா ஒட்டப்போட்டி, கபடிப்போட்டீன்னு தாப்பா பீல் பண்ணீட்டேன். கூட படிக்கிற எங்க ஊர் பசங்க வேர டேய் ஊர் மானமே இதுல தான் இருக்குன்னு கெளப்பீட்டானுங்க (பாத்துக்கோங்க... அந்த வயசுலயே ஊர் மானத்தக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு நம்ம கைல தான் இருந்துச்சி.. ஹி..ஹி..)
என்ன பண்றதுன்னு தெரியாமா பேன்னு முழிச்சிட்டு இருக்கும்போது அவ வந்தா. நீ எப்படியாவது ஜெயிச்சிருவேன்னு தெரியும் அதான் உன்ன கையத்தூக்கச்சொன்னேன்னு மழலைக்குரல்ல சொல்லீட்டு விரு விருன்னு போய்ட்டா..சும்மாவா சொன்னாங்க ஒவ்வொரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருக்கான்னு (ஹி..ஹி..)
அப்போ நான் ஜெயிச்சிட்டேனா ? அப்டீன்னு சஸ்பன்ஸ்லாம் வைக்க மாட்டேன். நான் ஜெயித்தேன். ஆனா எப்படிங்குறதுதான் சஸ்பென்ஸே.. ஹி..ஹி..
அந்த ஜெயித்த கதையை அடுத்த பகுதியில பாக்கலாம்.
வர்ட்டா..


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக